ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் சஞ்சய் தத். மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக சிறை சென்றதால் அவரின் சினிமா கேரியர் சரிந்தது. தற்போது சிறை வாசத்தை முடித்துவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார் சஞ்சய்.
இதனிடையே சஞ்சய் தத்தின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான ராஜ்குமார் ஹரானி, சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் இயக்க உள்ளார். இதில் சஞ்சய் தத்தாக ரன்பீர் கபூர் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது துவங்கப்பட வேண்டியது, ஆனால் இன்னும் படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லை, சில பிரச்னைகளால் இப்படத்தை இயக்குநர் கிடப்பில் போட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இயக்குநர் ராஜ்குமார் ஹிரானிக்கும், சஞ்சய் தத் வாழ்க்கை படத்தை தயாரிக்கவுள்ள தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாகத்தான் படப்பிடிப்பு துவங்கப்படாமல் இருப்பதாகவும், இவர்களுக்குள் பிரச்னை தீரும் வரை இப்படம் கிடப்பில் தான் இருக்கும் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.