இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
சமீபகாலமாக முன்னணியில் இருக்கும் ஸ்டார் நடிகர்களே தங்களுக்கான கேரக்டரின் தன்மை பொறுத்து அது நெகட்டீவ் ரோலாக இருந்தாலும் கூட நடிக்க தயாராகிவிட்டனர். உதாரணமாக கோலிவுட்டில் அஜித், மங்காத்தா படத்தில் வில்லனாக நடித்தார். பாலிவுட்டில் கூட அக்ஷ்ய் குமார் தற்போது ரஜினியின் 2.O-வில் வில்லனாக நடித்து வருகிறார். அமீர்கான், ஷாரூக்கான் போன்றோர்கள் கூட நெகட்டீவ் ரோலில் நடித்துவிட்டனர். நடிகர் சல்மான்கானோ தனக்கு நெகட்டீவ் ரோலே வேண்டாம் என்கிறார்.
சல்மாமான்கான், தற்போது தான் நடித்துள்ள சுல்தான் படத்தின் இறுதிக்கட்ட புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‛‛எனக்கு வில்லனாக நடிக்க விருப்பம் இல்லை, ரசிகர்களை முழுக்க முழுக்க எண்டர்டெயின்ட்மென்ட் செய்தாலே போதும். எப்பவும் போல ஹீரோவாகவும், நல்ல மனிதனாக இருக்கும் வேடங்களிலேயே நடிக்க விரும்புகிறேன். படம் முடிந்து ரசிகர்கள் வீடு திரும்பினால் கூட என்னுடைய ரோல் அவர்களுக்கு ஞாபம் இருக்க வேண்டும், அந்தமாதிரி ரோல்களிலேயே பெரிதும் நடிக்க விரும்புகிறேன். நிஜ வாழ்க்கையில் இல்லாவிட்டால் கூட திரையிலாவது நான் அதுபோன்று இருக்க விரும்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.