தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வீரம், வேதாளம் என அஜித் நடித்த இரண்டு படங்களை இயக்கிய சிவா, அடுத்தபடியாக அஜித்தின் 57-வது படத்தையும் இயக்கப்போவது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் இப்படத்தில் நாயகியாக நடிப்பது யார் யார்? என்கிற செய்திகள் வெளியானபோது பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் அடிபட்டன. இப்போது அனுஷ்கா உறுதியாகியிருப்பதாக கூறப்படுகிறது. டைரக்டர் சிவா தெலுங்கிலும் பல படங்களை இயக்கியவர் என்பதால் அவருக்கு அங்கேயும் மார்க்கெட் உள்ளது. அதனால் அஜித் படத்திற்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி ரசிகர்களையும் கருத்தில் கொண்டுதான் கதை ரெடி பண்ணியிருக்கிறாராம்.
அதோடு, தெலுங்கில் தற்போது பிசியாக இருக்கும் ஒரு நடிகை நடித்தால் படத்திற்கு இன்னும் பலமாக இருக்கும் என்பதால், அனுஷ்காவிடம் கால்சீட் கேட்டு வந்தார் சிவா. அவர் பாகுபலி-2, எஸ்-3 போன்ற படங்களில் நடித்து வருவதோடு, இந்த படங்களை முடித்ததும் பாகமதி படத்திலும் கமிட்டகியிருப்பதால் கால்சீட் கொடுப்பதில் காலம் கடத்தி வந்தார். ஆனால் சமீபத்தில் டைரக்டர் சிவா-அனுஷ்கா இருவரும் சந்தித்துக்கொண்டபோது, பாகுபலி-2,எஸ்-3 படங்களில் தனக்கான காட்சிகள் முடிந்து விடும் தருவாயில் இருப்பதால் அடுத்தபடியாக பாகமதி சரித்திர படத்தில் நடிக்க தயாராகி விட்டதை சொன்ன அனுஷ்கா, அந்த படத்தில் நடித்துக் கொண்டே அஜித் படத்தில் நடிப்பதற்கும் கால்சீட் கொடுத்திருக்கிறாராம். அந்த வகையில், ஏற்கனவே அஜித்துடன் நடித்த என்னை அறிந்தால் படத்தை விட இந்த புதிய படத்துக்கு அதிக நாட்கள் கால்சீட் கொடுத்திருக்கிறாராம் அனுஷ்கா.