டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் பேரனும், நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யா தெலுங்கில் முன்னணி இளம் ஹீரோ. அவரும், சென்னை பல்லாவரத்தை சேர்ந்த நடிகை சமந்தாவும் தீவிரவமாக காதலித்து வருவது தான் இப்போது உலகம் அறிந்த ரகசியம். ஆனால் காதலுக்கு நாகர்ஜுனா எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும், அவர் சமந்தாவை அழைத்து மிரட்டியதாகவும், வளர்ந்து வரும் நேரத்தில் காதல், கல்யாணம் வேண்டாம் என்று மகனுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நாக சைதன்யாவும், சமந்தாவும் ஐதராபாத் அடுக்குமாடி குடியிருப்பில் லிங்விங் டூ கெதராக வாழ்ந்து வரும் செய்தி வெளியானது. இது தொடர்பான வீடியோ காட்சியும் வெளியானது. இதனால் நாகார்ஜுனா சமந்தாவின் பெற்றோரை அழைத்து பேசியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சந்திப்பு நடந்துள்ளது என்பதை சமந்தா தரப்பினர் உறுதி செய்கிறார்கள். தற்போது இரு குடும்பத்தினரும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டனர். விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது.
சமந்தாவும் ஏற்கெனவே புதிய படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. நாகசைதன்யா தற்போது நடித்து வரும் படங்களை முடித்து கொடுத்த பிறகு திருமண தேதி நிச்சயிக்கப்படும் என்று தெரிகிறது. திருமணத்துக்கு பிறகு சமந்தா சினிமாவில் நடிக்க கூடாது என்று நிபந்தனை விதித்திருப்பதாகவும், அந்த நிபந்தனையை சமந்தா ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.