பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
கலக்கத்தில் இருக்கிறார் ஜெயசூர்யா.. காரணம் அவர் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸாக இருப்பதுதான்.. நல்ல விஷயத்திற்கு சந்தோஷப்படுவதற்கு பதிலாக கலங்குவானேன் என நினைக்கலாம்.. காரணம் இருக்கிறது. இரண்டு படங்களில் ஒன்று 'இன்ஸ்பெக்டர் தாவூத் இப்ராஹிம்' (IDI). இதுநாள் வரை பல படங்களில் போலீஸ் கேரக்டர்களில் ஜெயசூர்யா நடித்திருந்தாலும் அது வேறு யாரோ ஒரு ஹீரோவின் படமாகவும், சாதாரண போலீஸ் அதிகாரி கேரக்டராகவும் மட்டுமே இருந்து வந்துள்ளது. ஆனால் இப்போது தான் முதன்முறையாக டைட்டில் கேரக்டரில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்..
அதனால் இந்தப்படத்தை மிகவும் எதிர்பார்க்கிறார் ஜெயசூர்யா. இன்னொரு படம் இயக்குனர் ரஞ்சித் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிரேதம்'. இந்தப்படத்திற்காக மொட்டையெல்லாம் அடித்து அதிக உழைப்பை கொட்டியிருக்கிறார். தவிர இந்த ரஞ்சித் ஷங்கரின் டைரக்சனில் இதற்கு முன் ஜெயசூர்யா நடித்த 'சு சு சுதி வால்மீகம்' படம் தான் ஜெயசூர்யாவுக்கு தேசியவிருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுத்தந்தது. ஆகவே, கோஸ்ட் காமெடி த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப்படத்தையும் ஜெயசூர்யா மிகவும் நம்பியிருக்கிறார்.
இந்தநிலையில் இரண்டு படங்களும் ஒரே வரும் ஆகஸ்ட்-12ல் ஒரே தேதியில் வெளியாக இருக்கிறது. அப்படி வெளியானால் இதில் எந்தப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என்றும், ஒன்றின் வரவேற்பால் இன்னொன்றுக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்றும் அஞ்சுகிறார் ஜெயசூர்யா. அதுமட்டுமல்ல, வரும் ஜுன்-6ஆம் தேதி வேறு ஜெயசூர்யா நடித்துள்ள 'ஷாஜகானும் பரீக்குட்டியும்' என்கிற படமும் வெளியாக இருக்கிறது. ஆக 35 நாட்களில் 3 படங்கள் ரிலீசாக இருப்பது சாதனையைவிட சங்கடத்தைத்தான் தந்துள்ளது ஜெயசூர்யாவுக்கு.