Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஞாயிற்றுக்கிழமை மட்டும் படப்பிடிப்பு நடத்தி எடுக்கப்பட்ட படம்

29 ஜூன், 2016 - 14:27 IST
எழுத்தின் அளவு:
A-movie-made-only-at-Sunday-Holiday

இன்டிபண்டன் சினிமாக்கள் வெளிநாடுகளில் அதிகமாக எடுக்கப்படுகிறது. அதாவது வேறு துறைகளில் இருப்பவர்கள் இணைந்து ஜாலியாக எடுக்கும் படம். இப்போது அந்த மாதிரி படங்கள் தமிழிலும் வெளிவர ஆரம்பத்திருக்கிறது. சென்னை எக்ஸ்பிரஸ் அவன்யூவில் கட்டுமான பிரிவில் உதவி மேலாளராக பணியாற்றும் மகேஷ்வர பாண்டியன் தன் நண்பர்களுடன் இணைந்து 'இயக்குனன்' என்ற படத்தை இயக்கி உள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:


சிறு வயதில் இருந்தே எனக்கு சினிமா மற்றும் அது சார்ந்த வேலைகளில் அதிக ஈடுபாடு உண்டு. அதனால் வேலையில் சேர்ந்து ஓரளவுக்கு வருமானத்தை நிலைப்படுத்திய பின்னர், ஸ்ரீதர் என்பவருடன் இணைந்து அகமுகம் என்ற குறும்படத்தை இயக்கினேன். அது தந்த அனுபவமும், தன்னம்பிக்கையும் தனியாக ஒரு படத்தை இயக்கும் தைரியத்தைக் கொடுத்தன.


முதல் படத்தின் மூலம் பெரிதும் பேசப்பட்ட ஓர் இயக்குநர் இரண்டாவது படத்துக்கான வேலைகளில் ஈடுபடும்போது அவர் முதல் படத்துக்காக உருவாக்கிய கதாபாத்திரங்கள் அவரின் பட உருவாக்கத்தில் தலையிடுகின்றன. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நல்லது கெட்டது என இரண்டு எண்ணங்கள் இருக்கும். அந்த எண்ணங்களில் இருந்தும், கனவுலகிலிருந்தும் அவர் எவ்வாறு மீண்டு வருகிறார், அவரால் இரண்டாவது படத்தை எடுக்க முடிந்ததா என்பது கதை.


ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று படப்பிடிப்பில் ஈடுபடுவோம். படத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவருமே வேலை பார்த்துக்கொண்டே படத்துக்காக உழைத்தவர்கள்தான். படத்தில் இயக்குநராக ஈஸ்வர் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். இது 65 நிமிடங்கள் ஓடக்கூடிய சைக்கலாஜிக்கல் ஃபேன்டஸி இன்டிபெண்டன்ட் திரைப்படம். படத்தை துபாயில் வாழும் சாய் என்ற நண்பர் தயாரித்திருக்கிறார்.


இன்டிபெண்டன்ட் திரைப்படங்களுக்கு இந்தியாவில் பெரிய அளவில் மார்க்கெட்டிங் இல்லை. வெளிநாடுகளில் இத்தகைய படங்களைப் பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால் இப்படியொரு விஷயம் இருக்கிறது என்பதே நம்மவர்களுக்குத் தெரிவதில்லை. அதை அறிமுகப்படுத்தும் முயற்சியாக இதை ஆரம்பித்திருக்கிறோம்.


திரையரங்குகளை அணுகியபோது, அவர்கள் படம் சுமார் 2 மணி நேரமாவது ஓட வேண்டும் என்று கூறினர். அதனால் ஒரே திரையரங்கில் சிறப்புக் காட்சிகளாக படத்தை வெவ்வேறு நேரங்களில் இலவசமாக திரையிடத் திட்டமிட்டோம். மற்ற துறைகளில் இருந்துகொண்டேயும் திரைப்படம் எடுக்க முடியும் என்பதை உணர்ந்து இன்னும் பலர் திரையுலகில் நுழைய வேண்டும் என்பதே எங்களின் ஆசை என்கிறார் மகேஷ்வர பாண்டியன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in