பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'காக்கா முட்டை' மணிகண்டனின் உதவியாளர் சுரேஷ் சங்கைய்யா இயக்கி உள்ள படம் 'ஒரு கிடாயின் கருணை மனு'. விதார்த் கதையின் நாயகனாக நடிக்கிறார். டப்பிங் கலைஞர் ரவீனா ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஈராஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படம் ஒரு ஆட்டு கிடாயை மையமாக கொண்டது. விதார்த் கிராமத்தில் ஆடு மேய்க்கிற ஒருவர். அவர் செல்லமாக வளர்க்கும் ஆடு ஒன்று காணாமல் போகிறது. அதனை தேடி அலைகிறார். அந்த தேடலின் போது அவருக்கு ஒரு காதலியும் கிடைக்கிறாள். இருவரும் சேர்ந்து அதனை தேடுகிறார்கள். அந்த ஆடு கோவிலுக்கு பலி கொடுப்பதற்காக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதை காண்கிறார்கள். கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட ஆட்டை எப்படி அவர்கள் அதிலிருந்து காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை.
வழிபாடு என்கிற பெயரில் உயிர்பலி கொடுப்பது தவறு என்பதை உணர்த்தும் படம். விலங்குகளை பெற்ற பிள்ளைகளை போல பாதுகாக்கும் கிராமத்தினர் அதே விலங்கை கோவிலுக்கு பலியிடுவது ஏன் என்ற கேள்வியையும் முன் வைக்கிறது படம். இந்த படத்தில் ஆட்டின் பார்வையில் இருந்தும் காட்சிகள் விரிகிறது. ஆட்டின் கண்ணும், சத்தமும் உணர்த்தும் தகவல்களை விதார்த் புரிந்து கொள்வது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. சில இடங்களில் கிராபிக்ஸ் காட்சிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது. “உலகின் எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டும்” என்பதை கிடாயின் கருணை மனுவாக இருக்கிறது.