புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
கலைஞர் டி.வியில் தி.மு.கழக தலைவர் கருணாநிதியின் கதை, திரைக்கதை வசனத்தில் தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. 'ராமானுஜர்' தொடரை அடுத்து 'ரோமாபுரி பாண்டியன்' ஒளிபரப்பானது. இதனை குட்டிபத்மினி தயாரித்தார். தனுஷ் இயக்கினார். 2014ம் ஆண்டு ஒளிபரப்பை துவக்கி 2016 ஏப்ரலில் முடிந்தது. மொத்தம் 543 எபிசோட்கள் ஒளிபரப்பானது.
தற்போது கருணாநிதி எழுதிய 'தென்பாண்டி சிங்கம்' நாவலை சீரியலாக ஒளிபரப்ப இருக்கிறார்கள். இதற்கான திரைக்கதை அமைக்கும் பணி முடிவடைந்திருக்கிறது. நடிகர், நடிகைகள் தேர்வும் மும்முரமாக நடந்து வருகிறது. இதையும் தனுஷ் இயக்கலாம் என்று தெரிகிறது. பிரமாண்ட செட்டுகள் போடவும் ஏற்பாடு நடந்து வருகிறது. இதுபற்றிய முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும்.