ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் கே.வி.ஆனந்த் இயக்கிய கனா கண்டேன் படத்தில் வில்லனாக நடித்த வர் மலையாள நடிகர் பிருத்விராஜ். அதையடுத்து கே.பாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் படத்தில் நாயகனாக நடித்த அவர் தொடர்ந்து மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, ராவணன், காவியத்தலைவன் என பல படங்களில் நடித்தார். பின்னர் எந்த தமிழில் படத்திலும் நடிக்கவில்லை. அதேசமயம் மலையாளத்தில் அவரது மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு அவர் நடிப்பில் 5 மலையாள படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. அதனால் இப்போது அவரது மொத்த கவனமும் மலையாள சினிமா மீதுதான் உள்ளது.
இந்த நேரத்தில், அவரை வைத்து படம் பண்ணவும் சில தமிழ் டைரக்டர்கள் கதை சொல்லி வருகிறார்கள். ஆனால், கதையே கேட்டு முடிக்கும் பிருத்விராஜ், மலையாளத்தில் இப்போது எனது மார்க்கெட் நன்றாக இருக்கிறது. அதனால் இந்த நேரத்தில் தமிழில் கவனத்தை திருப்பினால் பாதிப்பு ஏற்படும். அதனால் இதே கதையை தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் படமாக்கி வெளியிடுங்கள் என்று கூறுகிறாராம். ஆனால் தமிழ் படங்களுக்கான கதைகள் மலையாளத்துக்கு செட்டாகாது என்று சொல்லி அவர் போடும் நிபந்தனைக்கு கட்டுப்படாமல் இயக்குனர்கள் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.