தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சினிமாவில் மிக முக்கியமான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு.. வெறுமனே காமெடியோடு மட்டும் தன்னை சுருக்கிக்கொள்ளாமல் குணச்சித்திர நடிப்பிலும் தடம் பதித்ததால் தான், 'பேரறியாதவர்' என்கிற படம் மூலம் இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசியவிருது தேடிவந்தது.. சில மாதங்களுக்கு முன்பு நிவின்பாலி நடிப்பில் வெளியான 'ஆக்சன் ஹீரோ பிஜூ'வில் கூட கண்கலங்க வைக்கும் நடிப்பை வெளிப்படுத்தினார். தனது அனுபவத்தில் இன்றைய தலைமுறை நடிகர்கள், இயக்குனர்கள் அறிவாளிகளாக இருந்தாலும், இன்னும் நிறைய கற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் தான் இருக்கிறார்கள் என வருத்ததுடன் குறிப்பிடுகிறார் சுராஜ்.
“முன்பெல்லாம் இயக்குனர்கள் சித்தப்பா, மாமன், பெரியப்பா, அண்ணன் மகன் என உறவுகளை சொல்லும் கதாபாத்திரங்களை தங்களது படங்களில் பயன்படுத்தினார்கள் அதனால் பல காமெடி நடிகர்களுக்கு ஒரே படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து. காமெடியும் நன்றாக இருந்தது. ஆனால் இன்றைய இளைஞர்களுக்கு அப்படி உறவுகளுடன் நெருங்கி வாழும் வாய்ப்பும் வாழ்க்கையும் கிடைக்காததால் அது அவர்களது கதை உருவாக்கத்திலும் வெளிப்படுகிறது. அவர்களைப்பொறுத்தவரை காமெடியன் என்றால் ஹீரோவின் நண்பன் என்கிற நினைப்பு மட்டுமே இருக்கிறது” என் இளைய தலைமுறை இயக்குனர்கள் பற்றி வருத்தப்பட்டு கூறியுள்ளார் சுராஜ் வெஞ்சாரமூடு.
மேலும் அவர் கூறும்போது, “இன்றைய ஜூனியர்களில் பலர் அவசிய தேவைக்காக போன் பண்ணினால்கூட அதை அட்டென்ட் செய்வதில்லை.. அல்லது சிறிது நேரம் கழித்தாவது அதற்கு பதில் அழைப்பு விடுப்பதும் இல்லை. ஜூனியர்கள் தயவு செய்து போன் வந்தால் அதை அட்டென்ட் செய்து சம்பந்தப்பட்டவரிடம் 'நோ' என்கிற பதிலாவது சொல்லுங்கள். இந்த பதிலை விட, நீங்கள் அழைப்பை ஏற்க மறுப்பதுதான் எதிர்முனையில் உள்ளவர்களை காயப்படுத்தும்” என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.