ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சொந்த பந்தம், வள்ளி, நாதஸ்வரம், சரவணன் மீனாட்சி, சபீதா என்கிற சபாபதி உள்பட பல தொடர்களில் நடித்தவர் சாய் சக்தி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரியான வருமானம் இல்லாததால் விரக்தியடைந்த அவர், தற்கொலை முயற்சியில் ஈடுபடப்போவதாக வாட்ஸ்அப்புகளில் செய்தி வெளியானது. அதையடுத்து, அவரைக்கேட்டபோது, சீரியல்களை நம்பிதான் எனது குடும்பமே உள்ளது. ஆனல் எனக்கு சரியானபடி நடிக்க வாய்ப்பு இல்லை. அதனால் கடன் தொல்லை அதிகமாகி விட்டது. நான் சான்ஸ் கேட்க சென்ற இடங்களில் யாருமே வாய்ப்பு தரவில்லை. அதனால் ஏற்பட்ட மன உளச்சல் காரணமாகத்தான நான் தற்கொலை முயற்சியில் இறங்க முடிவு செய்தேன் என்று சொன்னார் சாய் சக்தி.
இந்தநிலையில், தற்போது துபாய் செய்ய முடிவெடுத்திருப்பதாக சொல்கிறார் சாய் சக்தி. அதுபற்றி அவர் கூறுகையில், தமிழ் சீரியல்களில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் வேலை வெட்டி இல்லாத இந்த ஊரில் இருக்க எனக்கு பிடிக்கவில்லை. அதனால் துபாய் சென்று அங்குள்ள லோக்கல் சேனல் களில் நடிக்கப்போகிறேன். அங்குள்ள சில நண்பர்கள் எனக்கு அழைப்பு விடுத்துள்ளனர். பிழைப்பு தேடி துபாய் செல்லும் நான் எப்போது மீண்டும் சென்னை திரும்புவேன் என்று சொல்ல முடியாது. ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோகூட ஆகலாம். சீரியல்களில் மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே சென்னை திரும்புவேன் என்கிறார் சாய்சக்தி.