ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த ஆண்டு வெளியான பாகுபலி படம் இந்தியாவில் மட்டுமே கிட்டத்தட்ட 600 கோடி ரூபாயை வசூலித்தது. ஒட்டுமொத்த இந்திய சினிமா கலைஞர்களை மட்டுமல்ல ரசிகர்களையும் வாய்பிளக்க வைத்தது 'பாகுபலி'. இந்தப் படத்தின் 2ஆம் பாகம் 'பாகுபலி : தி கன்குளுசன்' என்ற பெயரில் வளர்ந்து வருகிறது. தற்போது படப்பிடிப்பு பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. சுமார் 60 சதவிகிதத்துக்கு மேல் படப்பிடிப்பு முடிவுற்றுள்ளநிலையில் 'பாகுபலி 2' படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளுக்கான படப்பிடிப்பு கடந்த வாரம் ஆரம்பமானது.
கிட்டத்தட்ட 10 வாரங்கள் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறாராம் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இந்த 70 நாட்களில் பிரம்மாண்டமான போர்க்காட்சிகள் படமாக்கப்படவிருக்கிறதாம். இந்த படப்பிடிப்பிற்காக சண்டை காட்சிகளுக்கான பயற்சி, ஒத்திகை ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது. இன்னொரு பக்கம், செட் அமைக்கும் பணி, கிராபிக்ஸ் பணிகளுக்கான திட்டங்கள் என கடந்த சில மாத காலமாக கடுமையாக உழைத்திருக்கிறது ராஜமௌலி யூனிட்..
பாகுபலி முதல் பாகத்தில் காட்டப்பட்ட போர்க்காட்சிகளைவிட ரசிகர்களை வியக்க வைக்கும் அளவுக்கு பிரம்மாண்டமாகவும், விறுவிறுப்பான யுக்திகளுடனும் 2ஆம் பாகத்தின் போர்க்காட்சிகள் படமாக்கப்படவிருக்கிறதாம். இந்த போர்க்காட்சிகளுக்கான செலவு மட்டுமே 30 கோடி ரூபாய். பாகுபலி படத்தின் போர்க்காட்சிகளுக்கான செலவு 15 கோடி ரூபாய்தான்.