வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இன்றைய தேதியில் பிசியான நடிகர் யார் என்றால் சமுத்திரக்கனிதான். வில்லன், குணசித்திரம், ஹீரோ என கலந்துகட்டி நடித்து வரும் சமுத்திரக்கனி தான் தற்போது கோடம்பாக்கத்தில் மோஸ்ட் வான்டட் ஆக்டர். தனக்கு இத்தனை டிமாண்ட் இருப்பது தெரிந்தும், பணத்தைப் பற்றி கவலைப்படாமல் அப்பா என்ற படத்தை தயாரித்து, இயக்கியிருக்கிறார்.
தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு நல்ல இமேஜை கொண்டிருக்கும் சமுத்திரக்கனி, இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு அப்பா படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார். தனக்கு வாழ்க்கைக் கொடுத்த நாடோடிகள் படத்தை நினைவுகூர்கிற வகையில் தன்னுடைய பட நிறுவனத்துக்கு நாடோடிகள் என்று பெயர் வைத்திருக்கிறார்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி நடத்த வேண்டும்? என்பதை சொல்கிற படமாக உருவாகியிருக்கும் அப்பா படம் இந்த வாரம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 250 தியேட்டர்களை கமிட் பண்ணி இருக்கிறார்கள். ரிலீஸுக்கு மேலும் சில நாட்கள் இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று நம்பலாம்.