Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குனரானது ஏன்? சி.வி.குமார் விளக்கம்

27 ஜூன், 2016 - 17:10 IST
எழுத்தின் அளவு:
CV-Kumar-replied-why-he-become-director

'அட்டக்கத்தி' படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனவர் சி.வி.குமார். அதன் பிறகு பீட்சா, பீட்சா-2, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி, இன்று நேற்று நாளை, காதலும் கடந்து போகும், இறைவி படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக உள்ளார். அவர் 'மாயவன்' என்ற படத்தின் மூலம் இயக்குனராகியிருக்கிறார்.


'யாருடா மகேஷ்' படத்தில் நடித்த சந்தீப் கிஷன் ஹீரோவாகவும், 'பரமன்' படத்தில் நடித்த லாவண்யா திரிபாதி ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர டேனியல் பாலாஜி, இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப், அக்ஷரா கவுடா, பகவதி பெருமாள், மைம் கோபி, ஜெயபிரகாஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்கிறார், ஜிப்ரான் இசை அமைக்கிறார். படம் பற்றியும், இயக்குனரானது பற்றியும் சி.வி.குமார் கூறியதாவது:


இப்படத்தின் கதையை நான் எழுதிய பிறகு நலன் குமாரசாமியை அழைத்து இதை இயக்கி தரச் சொன்னேன். கதையினை படித்தவர் நன்றாக இருக்கிறது. நான் திரைக்கதை அமைத்து தருகிறேன். நீங்களே இயக்குங்கள் என்று கூறினார். எனக்கு முதலில் படம் இயக்க தயக்கம் இருந்தது. ஆனால் நலன் உட்பட என்னுடன் இருந்தவர்கள் அனைவரும் என்னால் இதனை இயக்க முடியுமென்ற நம்பிக்கையை அளித்தனர்.


அதன் பின்னர் மும்முரமாக படம் இயக்கும் வேலையில் இறங்கி, தற்போது படப்பிடிப்பு நிறைவடையும் நிலைக்கு வந்து விட்டது. படத்தின் திரைக்கதையை க்ரைம் த்ரில்லர் பின்னணியில் அமைத்திருக்கிறோம். படம் நாங்கள் நினைத்தவாறு சிறப்பாக வந்திருக்கிறது. எனக்கு இது வரை நாங்கள் தயாரித்த அனைத்து படங்களிலும் பட துவக்கம் முதல் முடிவு வரை அனைத்திலும் எனது பங்களிப்பு இருந்துள்ளது. எனவே பட இயக்கத்தை தைரியமாக மேற்கொண்டேன். ஆனால் தயரிப்பாளராக இருந்து ஒரு படத்தின் இயக்குனரை வேலை வாங்குவதற்கும், இயக்குனராக வேலை செய்வதற்கும் இருக்கும் வித்தியாசத்தை எனக்கு இப்படம் உணர்த்தியது. இப்படத்தினை நான் இயக்குகிறேன் என கூறியவுடன் தான் தயாரிப்பதாக ஞானவேல்ராஜா முன் வந்தார். அவரின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து எங்கள் திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்ட்ஸ் இப்படத்தினை தயாரிக்கிறது. என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in