மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? |
பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான். அவர் தற்போது தான் தயாரித்து நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அக்ஷத் வர்மா இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பை அருகில் உள்ள பவாவில் நடந்த வருகிறது.
நேற்று முன்தினம் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது வில்லன்கள் அவரை அடித்து வீழ்த்துவது போன்ற காட்சியில் அவர் ஓடிவந்து கிழே விழுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. வேகமாக ஓடிவந்த சயீப் அலிகான் கால் இடறி நிஜமாகவே நிலைகுலைந்து கீழே விழுந்தார். இதில் அவரது கை வேகமாக தரையில் ஊன்றியதால் விரல் எலும்புகள் முறிந்தது. வலியால் துடித்த அவரை அந்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபரேஷன் நடந்தது.
சயீப் அலிகான் நலமுடன் இருப்பதாகவும் அவர் சில வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அவர் தனது பிடிப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளார். தொடர்ந்து சயீப் அலிகான் சிகிச்சை பெற்று வருகிறார். ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று அவரது சகோதரி சோஹா கூறியுள்ளார்.