தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி, 2002ம் ஆண்டு தமிழக - கர்நாடக நதி நீர் தொடர்பான பிரச்னை எழுந்தபோது, நதிநீர் இணைப்பிற்காக ரூ.1 கோடி வழங்குவதாக ரஜினி அப்போது அறிவித்தார். ஆனால் ரஜினி சொன்னபடி நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு, ஒரு கோடி ரூபாய் நிதியை தரவில்லை என்றும், ஒரு மாதத்துக்குள் ரஜினி அளிக்காவிட்டால், அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்துவோம் என, தேசிய தென்மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்துள்ளது. ஆனால் ரஜினி, ஏற்கனவே அறிவித்தபடி நதிநீர் இணைப்பிற்கு ரூ.1 கோடி நிதி அளித்துவிட்டதாக அவரின் சகோதரர் சத்யநாராயண கூறியுள்ளார்.
தஞ்சை கோவிலுக்கு வந்த சத்ய நாராயணா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ‛‛அமெரிக்காவில் ரஜினி நலமாக இருக்கிறார். கபாலி படம் ஜூலை 15ம் தேதி ரிலீஸாக இருப்பதாக செய்தி வந்துள்ளது. பட ரிலீஸ்க்கு முன்னர் நிச்சயம் அவர் சென்னை வந்துவிடுவார் என்றார். மேலும் நதிநீர் தொடர்பாக ரஜினி அறிவித்த ரூ.1 கோடி நிதி குறித்த செய்தியாளர்கள் கேட்டபோது, ரஜினி ஏற்கனவே சொன்னபடி அந்த ஒரு கோடியை தேசிய வங்கியில் டெபாசிட் செய்துவிட்டார். நதிநீர் இணைப்பு திட்டம் துவங்கியதும் நிச்சயம் அந்த தொகை அந்த திட்டத்திற்கு கொடுக்கப்படும்''.
இவ்வாறு சத்ய நாராயணா கூறினார்.