இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தை இயக்கியதன் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் முனைப்புடன் இருக்கிறார் பா.ரஞ்சித். 'அட்டகத்தி' படம் மூலம் முதன் முதலாக இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித் அடுத்து கார்த்தி நடித்த 'மெட்ராஸ்' படத்தை இயக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
'அட்டகத்தி' படத்தை வெளியிட்டு பா.ரஞ்சித்துக்கு ஒரு அடையாளம் காட்டிய ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் அடுத்து அவரையே இயக்குனராக வைத்து 'மெட்ராஸ்' படத்தையும் இயக்கியது. அப்போதே, சூர்யா நடிக்கும் படத்திற்கும் ஒப்பந்தம் போட்டார்கள். ஆனால், 'கபாலி' படம் இயக்கும் வாய்ப்பு வந்ததும் ரஞ்சித்திற்கு எந்த தடையும் சொல்லாமல் பாராட்டி வழி அனுப்பி வைத்தார்கள்.
'கபாலி' படமும் முடிந்து அடுத்த மாதம் வெளியாக உள்ளது. சூர்யாவும் விரைவில் 'எஸ் 3' படத்தை முடிக்க உள்ளார். அதனால், ரஞ்சித்தும், சூர்யாவும் அடுத்து இணைய உள்ளார்கள். நேற்று ஐதராபாத்தில் நடைபெற்ற 'கபாலி' தெலுங்கு இசை வெளியீட்டில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரஞ்சித், இது பற்றி தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு சில மாதங்களில் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. அதற்கான கதையை ரஞ்சித்தும் எப்போதோ எழுதிவிட்டார் என்று சொல்லப்படுகிறது.
'கபாலி' படம் மாபெரும் வெற்றி பெறும் பட்சத்தில் பா.ரஞ்சித், சூர்யா இணையும் படத்திற்குத்தான் பலன்கள் அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது.