ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் இருக்கை அமைப்பின் சார்பில் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை உருவாக்குவதின் அவசியம் குறித்த விளக்க விழாவும், தமிழ் இருக்கை கீதம் குறுந்தகடு வெளியீட்டு விழாவும் சென்னையில் நேற்று நடந்தது. இதில் குறுந்தகட்டை வெளியிட்டு உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் பேசியதாவது:
தமிழ் செம்மொழி அந்தஸ்து பெற்று விட்டது. அது மட்டும் போதுமா தமிழின் புகழ் உலக அரங்கில் எதிரொலிக்க வேண்டாமா? ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் உலகின் தொன்மையான மொழிகளுக்கு தனி இருக்கை உள்ளது. தமிழ் மொழிக்கென்று தனி இருக்கை இல்லை. தமிழ் சமூகம் எழுந்து நின்றால்தான் உலகில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களிலும் தமிழ் இருக்கைகளை உருவாக்க முடியும். தமிழால் வாழும் வியாபாரிகளும், கல்வி தந்தைகளும் ஆளுக்கு ஒரு கோடி கொடுத்தால் உலகில் உள்ள அனைத்து பல்கலைகழங்களிலும் தமிழ் இருக்கைகள் கொண்டு வர முடியும். தமிழால் வாழும் நடிகர்கள் கொடுத்தால் போதும். அவர்கள் கொடுக்காவிட்டாலும் ஒரு அறிக்கை விட்டால் போதும் அவர்களது ரசிகர்கள் வரிந்து கட்டிக்கொண்டு கொடுப்பார்கள். தமிழ் மொழிக்காக இதை நீங்கள் செய்யுங்கள். இவ்வாறு நீதிபதி கிருபாகரன் பேசினார்.