ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இன்றைக்கும் திருமண வீடுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் “மணமகளே மருமகளே வா வா... உன் வலது காலை எடுத்து வைத்து வா...” இந்தப் பாடலை கண்ணதாசன் எழுதியதாகத்தான் பலரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இதனை எழுதியது பஞ்சு அருணாசலம். அதுவும் திடீர் பாடலாசிரியராகி எழுதிய முதல் பாடல்.
1962ம் ஆண்டு வெளியான 'சாரதா' படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், சி.ஆர்.விஜயகுமாரி, எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்காராவ் நடித்திருந்தனர். கே.எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருந்தார்.
படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த பிறகு படத்தில் இடம்பெறும் திருமண காட்சியில் ஒரு பாடல் வைத்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் நினைத்தார். கே.வி.மகாதேவன் டியூனை போட்டுவிட்டார். கண்ணதாசனை தேடினார்கள். அவர் வெளியூரில் இருந்தார். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போது கண்ணதாசனின் உதவியாளராக இருந்த பஞ்சு அருணாசலம் கண்ணதாசனின் 'தென்றல்' பத்திரிக்கையில் அவ்வப்போது கவிதைகள் எழுதி வந்தார்.
கண்ணதாசனின் பாடல்களை இசை அமைப்பாளர்களிடம் கொடுப்பதும் அதற்கான பணத்தை வாங்கி வருவதும் பஞ்சு அருணாசலத்தின் வேலை. அப்படி பணம் வாங்க வந்த பஞ்சு அருணாசலத்தை உட்கார வைத்து கே.எஸ்.கோபால கிருஷ்ணன் “பஞ்சு நீதான் கவிதையெல்லாம் எழுதுறியே இந்த மெட்டுக்கு ஒரு பாட்டு எழுது” என்றார். பஞ்சு பயந்தார். “கவிஞர்(கண்ணதாசன்) கோவிச்சுக்குவாரே” என்றார். “கவிஞரை நாங்க சமாளிச்சுக்கிறோம் நீ எழுது” என்றார். அந்த பாடல்தான் மணமகளே மருமகளே வா.. வா.. பாடல்.