ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கிக் படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரபலமானவர் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ், தற்போது டிஷ்யூம் படத்தில் நடித்து முடித்திருப்பவர், அடுத்தப்படியாக கைவசம் சில படங்கள் வைத்திருக்கிறார். இந்நிலையில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான டான் படங்களின் வரிசையில் விரைவில் 'டான்-3' உருவாக இருக்கிறது. இதில் முதல் இரண்டு பாகங்களில் நடித்த ப்ரியங்கா சோப்ரா, மூன்றாம் பாகத்தில் நடிக்கவில்லை. அதனால் அந்த ரோலில் ஜாக்குலின் பெர்ணான்டஸ் நடிக்க இருப்பதாக செய்தி வந்தது. ஆனால் இதனை ஜாக்குலின் மறுத்துள்ளார்.
இது குறித்து ஜாக்குலின் பெர்ணான்டஸ் கூறியிருப்பதாவது... ''இப்போது தான் மும்பைக்கு வந்தேன். வந்ததுடன் நான் 'டான்-3'யில் நடிப்பதாக செய்தி கேள்விப்பட்டேன். எங்கிருந்து இது போன்று செய்தி கிளம்புகிறது என்று தெரியவில்லை. டான் படம் தொடர்பாக யாரும் என்னிடம் பேசவில்லை, இந்த செய்தி முற்றிலும் தவறானது என்று கூறியுள்ளார்.