ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நாசர் இயக்கிய அவதாரம் படத்தில் வில்லனாக நடித்தவர் பாலாசிங். அதன்பிறகு இந்தியன், கன்னத்தில் முத்தமிட்டாள், தீனா, சாமி, விருமாண்டி, ஜிகர்தண்டா, பூலோகம் என பல படங்களில் நடித்த அவர், தற்போதும் சில படங்கள் மட்டுமின்றி ஆதிரா உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பாலாசிங் சீரியல் ஸ்பாட்டுகளுக்கு செல்லும்போது, சீரியல் நடிகர் - நடிகைகளிடம் ரொம்ப சகஜமாக பழகினாராம். ஓய்வு நேரங்களில் அவர்களிடம் செம காமெடி அரட்டையிலும் ஈடுபட்டாராம். பாலாசிங் சினிமா நடிகர், சீரியல் நடிகர்களிடம் சகஜமாக பழக மாட்டார் என்று நினைத்து விலகியே நின்ற நடிகர்கள், அவர் தங்களிடம் இயல்பாக பேசிப்பழகியதைப் பார்த்து ஆச்சர்யமடைந்தார்களாம்.
இதுபற்றி பாலாசிங் கூறுகையில், நான் சினிமா நடிகன் என்றாலும், சினிமா- சீரியல் இரண்டிற்குமிடையே பெரிய மாற்றம் தெரியவில்லை. திரைதான் வித்தியாசம். அதேபோல் நடிகர் நடிகைகளும் எனக்கு வித்தியாசம் கிடையாது. எல்லோரையும் ஒரேமாதிரியான கலைஞர்களாகத்தான் பார்க்கிறேன் என்று கூறும் பாலாசிங், இனிமேல் நான் சினிமா மட்டுமின்றி சீரியல்களிலும் தொடர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன் என்கிறார்.