'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தன்னுடைய முதல் படமான 3 படத்தில் இடம்பெற்ற 'கொலவெறி' பாடல் மூலம் உலகமெங்கும் கவனஈர்ப்பு பெற்ற இசையமைப்பாளர் அனிருத், அதன் பிறகு தொடர்ந்து ஹிட் பாடல்களைக் கொடுத்த அனிருத், தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். படங்களுக்கு இசையமைப்பதில் கவனம் செலுத்துவதோடு அவ்வப்போது தனிப்பட்ட இசை ஆல்பங்களுக்கும் இசையமைக்கிறார். வெளிநாடுகளுக்கு சென்று, லைவ் கான்சர்ட்ஸ் என்கிற இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.
இந்நிலையில், விரைவில் சர்வதேச இசை ஆல்பம் ஒன்றையும் வெளியிடவிருக்கிறார் அனிருத். இதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த தயாரிப்பாளரும், பாடலாசிரியருமான டிப்லோவுடன் ஒப்பந்தம் செய்துள்ளார் அனிருத். இந்த செய்தியை டிப்லோவே தனது ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதன் மூலம் வெளிநாட்டில் அனிருத்தின் புகழ் மேலும் உச்சத்திற்குச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது ரம், ரெமோ, தல 57 உட்பட பல தமிழ்ப்படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத் தன்னை அறிமுகப்படுத்திய தனுஷை கழற்றிவிட்டதுதான் ஆச்சர்யம்.