டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'நீ வருவாய் என' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ராஜகுமாரன் அதன் பின் 'விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன்' ஆகிய படங்களை இயக்கினார். அதன் பின் 10 வருடங்கள் கழித்து 2013ல் 'திருமதி தமிழ்' என்ற படத்தை இயக்கி நாயகனாகவும் நடித்தார். ஒரு நடிகராக கடுமையான விமர்சனங்களையும், கருத்துக்களையும் எதிர்கொண்டார் ராஜகுமாரன். ராமராஜனுக்குப் பிறகு அதிகம் கிண்டலையும், கேலியையும் கொண்ட விமர்சனங்களைச் சந்தித்தது ராஜகுமாரனாகத்தான் இருக்கும்.
அதற்குப் பிறகு 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்தார். அடுத்து அவரே ஒரு படத்தை இயக்கி நடிகராகவும் நடிக்கத் திட்டமிட்டிருந்த சமயத்தில் 'கோலி சோடா, பத்து எண்றதுக்குள்ள' படங்களின் இயக்குனரான விஜய் மில்டன் அவருடைய 'கடுகு' படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்தார். டி.ராஜேந்தர்தான் முதலில் அந்தப் படத்தில் நடிப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அவருக்குப் பதிலாக திடீரென ராஜகுமாரனை விஜய் மில்டன் தேர்வு செய்தார். மீண்டும் ராஜகுமாரனா என பலரும் இயக்குனர் விஜய் மில்டனையும் சேர்த்து கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள்.
ஆனால் 'கடுகு' படத்தில் அந்தக் கதாபாத்திரத்திற்கு ராஜகுமாரனை விட பொருத்தமான நடிகர் வேறு யாரும் கிடையாது. என்னை முதலில் கிண்டல் செய்தவர்களே கூட இதுவரை எடுத்த படத்தைப் பார்த்துவிட்டு என்னுடைய முடிவு சரியானதுதான் என பாராட்டினார்கள் என்கிறார் விஜய் மில்டன்.
'கடுகு' சிறுத்தாலும் காரம் குறையாது என்பதை நிரூபிக்க விரைவில் வருகிறார்கள் விஜய் மில்டனும், ராஜகுமாரனும்....