தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவான பொல்லாதவன், ஆடுகளம் படங்கள் அவர்களுக்கு பெரிய வெற்றியாக அமைந்தது. ஆனபோதும் தனது மூன்றாவது படமான வடசென்னையை சிம்புவை வைத்து இயக்க முடிவு செய்திருந்தார் வெற்றிமாறன். ஆனால் திடீரென்று என்ன நடந்ததோ அந்த படத் தையே கிடப்பில் போட்டு விட்டார். சில வருடங்களாக படம் இயக்குவதில் இருந்து விலகியிருந்தவர், பின்னர் விசாரணை படத்தை இயக்கினார். அதை யடுத்து மீண்டும் வடசென்னையை தூசு தட்டியிருக்கிறார். அந்த படத்தில் அவரது ஆஸ்தான ஹீரோவான தனுஷே நடிக்கிறார்.
மேலும், ஆடுகளம் படத்தில் சேவல் சண்டையை மையமாக வைத்து படமாக்கிய வெற்றிமாறன், வடசென்னை படத்தில் கேரம்போர்டு விளையாட்டை மையமாக வைத்துள்ளாராம். அதனால் கேரம் காய்ன்களை எப்படி விரலால் சுழற்றியடிக்க வேண்டும் என்கிற பயிற்சி தனுசுக்கு கொடுக்கப்படுகிறதாம். அதற்காக ஒரு பயிற்சியாளர் நியமிக்கப்பட்டிருக்கிறாராம். தற்போது ஜெயில் செட்டில் சில காட்சிகளை படமாக்கி வரும் வெற்றிமாறன், விரைவில் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குகிறாராம். மேலும், இந்த வடசென்னை படம் மூன்று பாகங்களாக படமாக்கப்பட இருப்பதாக இப்போதே அறிவித்துள்ளனர்.