‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தற்போது சிவகார்த்திகேயனின் மானேஜராக இருக்கும் ஆர்.டி.ராஜா சில வருடங்களுக்கு முன் இயக்குநர் செல்வபாரதியிடம் உதவியாளராக இருந்தவர். பிறகு விஜய் டிவியில் வேலைக்கு சேர்ந்தவர், அங்கே தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனுடன் நட்பாகி, தற்போது அவருக்கு மானேஜராகவும், அவரது படத்தை தயாரிப்பவராகவும் ஆகிவிட்டார்.
‛24 ஏஎம் ஸ்டுடியோஸ்' பட நிறுவனம் ஆர்.டி.ராஜா பெயரில் இருந்தாலும் அதன் உண்மையான தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் என்பது படத்துறையில் உள்ள அனைவருக்கும் தெரியும். அதனால்தான் ரெமோ படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் அத்தனை படங்களையும் ‛24 ஏஎம் ஸ்டுடியோஸ்' பட நிறுவனம் தயாரிக்கிறது.
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‛ரெமோ' படத்தைத் தொடர்ந்து மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ஒன்றையும் இதே நிறுவனம் தயாரிக்கிறது. ‛ரெமோ' படத்தின் வேலைகள் முடிவடைந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து ‛24 ஏஎம் ஸ்டுடியோஸ்' நிறுவனத்தின் 3 ஆவது படத்தை நேற்று இன்று நாளை பட இயக்குநர் ரவிகுமார் இயக்குகிறார். இதிலும் சிவகார்த்திகேயன்தான் ஹீரோ.
இந்தப் படத்தை அடுத்து மலையாளப்பட ஹீரோவான நிவின் பாலி நடிக்கவிருக்கும் படத்தை ‛24 ஏஎம் ஸ்டுடியோஸ்' தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. தற்போது இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் பிஸியாக இருக்கிறாராம் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. இந்தப்படத்தை பிரபு ராதாகிருஷ்ணன் என்ற பெயர் மாற்றத்துடன் ‛பட்டாளம்' படத்தை இயக்கிய ரோஹன் கிருஷ்ணா இயக்குகிறார்.
இப்படியாக ஒரு படம் தயாரிப்பில் இருக்கும்போதே அடுத்தடுத்து நான்கு படங்களை தயாரிக்க இருக்கிறார் ஆர்டி ராஜா.