ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி |
தமிழுக்காக இசையை வளைத்தவர் மனயங்கத் சுப்பிரமணியன் விஸ்வநாதன் என்ற, எம்.எஸ்.விஸ்வநாதன்! கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் உள்ள எலப்புள்ளி என்ற கிராமத்தில் பிறந்தார். பள்ளிப் படிப்பில் நாட்டமில்லாமல், நீலகண்ட பாகவதரிடம் கர்நாடக இசை பயின்றார். 13வது வயதிலேயே, மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.இசையமைப்பாளர், சி.ஆர்.சுப்புராமன் இசைக்குழுவில், விஸ்வநாதன் ஆர்மோனியமும், அவர், வயலினும் வாசித்தனர். பின், இருவரும் இணைந்து, 1953ல், ஜெனோவா படத்திற்கு இசையமைத்தனர்.தமிழில், 800; மலையாளம், 80; தெலுங்கு, 30; கன்னடம், 15 ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ராமமூர்த்தியுடன் இணைந்து, 750 படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழ்த்தாய் வாழ்த்தான, நீராரும் கடலுடுத்த பாடலுக்கு, மோகன ராகத்தில் இசையமைத்தார். 2015 ஜூலை 14ம் தேதி இறந்தார். இறவா இசையைக் கொடுத்த, எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்த தினம் இன்று!