ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
1997 முதல் 2005 வரை தூர்தர்ஷினில் சக்கைபோடு போட்ட தொடர் சக்தி மான். ஞாயிற்றுகிழமை 12 மணிக்கு ரோட்டில் குழந்தைகளையே காண முடியாது. அந்த அளவிற்கு அந்த சீரியலில் தங்களை பறிகொடுத்து நின்றார்கள். சக்திமான் உடைகள், சக்திமான் பொம்பைகள் என அதைச் சுற்றி வியாபாரங்களும் நடந்தது. சக்திமான் போன்று மாடியிலிருந்து குதித்து உயிர்விட்ட குழுந்தைகளும் உண்டு. அந்த அளவிற்கு சக்தி மிகுந்ததா இருந்தது சக்திமான் தொடர்.
500 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பான சக்திமான் தொடர் நிறுத்தப்பட்டு 15 வருடங்களுக்கு மேலாகியும் அந்த குழந்தைதனமான முகம் கொண்ட முகேஷ் கண்ணாவை யாராலும் மறக்க முடியாது. அவருக்கு இப்போது 57 வயதாகிறது. அவர்தான் சக்திமான் தொடரை மீண்டும் ஆரம்பிக போவதாக அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: சக்திமானை இன்னும் மக்கள் மறக்கவில்லை. பழைய மாதிரி என்னாலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால் மீண்டும் சக்திமானாக மாற முடிவு செய்திருக்கிறேன். புதிய தொடர், சக்திமான் கதை விட்ட இடத்திலிருந்து தொடங்கும், அதே குழந்தை குறும்புகளும் இருக்கும். இப்போது வளர்ந்துள்ள டெக்னாலஜியை பயன்படுத்தி இன்னும் சிறப்பாக கொண்டு வர முடியும். இதற்காக டிடி சேனலில் மாலை 5 மணி சிலாட் கேட்டிருக்கிறேன். சோனி, கலர்ஸ், சேனல்களிடமும் பேசி வருகிறேன். என்கிறார் முகேஷ்.