இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மான் வேட்டை வழக்கு, போதையில் கார் ஓட்டிய வழக்கு என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள சல்மான்கான், இப்போது தனது சுல்தான் படம் தொடர்பாக கூறிய பேட்டி ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அலி அப்பாஸ் ஜாபர் இயக்கத்தில் சல்மான்கான், அனுஷ்கா சர்மா நடித்துள்ள படம் ‛‛சுல்தான். இப்படத்தில் சல்மான் மல்யுத்த வீரராக நடித்திருக்கிறார். தற்போது இப்படத்தின் ரிலீஸ்க்கான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் சல்மான் இப்படத்திற்காக தான் கஷ்டப்பட்ட விதத்தை கூறியது சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது. அப்படி என்ன சொன்னார் சல்மான்?
அதாவது, இப்படம் மல்யுத்த வீரர் பற்றிய கதை என்பதால் இப்படத்திற்காக கடுமையாக உழைத்தாராம் சல்மான். குறிப்பாக வெயிட் லிப்ட்டிங் உள்ளிட்ட பல உடல் உழைப்புகளை கொடுத்தாராம். ஆகையால் இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்து வரும் போது, ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் எந்த நிலையில் இருப்பாரா அதேப்போன்று தான் உணர்ந்ததாகவும், தன்னால் நேராக கூட நிற்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
சல்மானின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் சல்மானை நிறையபேர் வசைபாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி சல்மான், தன்னுடைய இந்த பேச்சிற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பெண்கள் அமைப்பினரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.