புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
சி.ஜே.பாஸ்கர் இயக்கி வந்த தொடர் ஆதிரா. சின்னத்திரைகளில் ஒளிபரப்பான சீரியல்களில் இந்த சீரியல் நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஸ்ரீவாணி, அஞ்சுஅரவிந்த், ஜெய்தனுஷ், அம்பிகா மோகன் உள்பட பலர் நடித்தனர். இந்த தொடரில் பெரும்பகுதி படப்பிடிப்பு கேரளாவில் உள்ள காட்டுப்பகுதியில்தான் படமாக்கப்பட்டு வந்தது. அதனால் சினிமா படப்பிடிப்புகளுக்கு அவுட் டோரில் முகாமிடுவது போன்று இந்த ஆதிரா தொடருக்காக கேரளாவில் முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தி வந்தார் சி.ஜே.பாஸ்கர்.
ஆனால் தற்போது 250 எபிசோடுகள் வரை ஒளிபரப்பாகியுள்ள ஆதிரா தொடர் இன்னும் ஓராண்டு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், இம்மாதம் 24-ந்தேதியோடு ஆதிரா தொடர் நிறைவு பெறுவதாக கூறுகிறார்கள். அதை யடுத்து அந்த சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தில் இந்தியில் பெரிய அளவில் நேயர்களின் வரவேற்பை பெற்ற ஒரு டப்பிங் நெடுந்தொடர் ஒளிபரப்பாகிறதாம்.