தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல இந்தி நடிகரான அக்சய்குமார், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.ஓ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தயாராவதால் இந்தி பதிப்பு அக்சய்குமாரை முன்வைத்துதான் நகர்த்தப்படுகிறதாம். அதனால் அவருக்கான காட்சிகள் அதிகமாக உள்ளதாம். மேலும், இந்த படத்தை அடுத்தும் அவர், மகேஷ்பாபு நடிக்கும் மூன்று மொழிப்படத்தில் வில்லனாக நடிப்பதாக பரபரப்பு செய்திகள் வெளியாகியுள்ளன.
அதாவது, தமிழில் விஜய்யின் கத்தி படத்தை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், அதற்கடுத்து அகிரா என்றொரு இந்தி படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் தமிழில் அருள்நிதி நடிப்பில் வெளியான மெளனகுரு படத்தின் ரீமேக் ஆகும். அப்படத்தின் வேலைகள் முடிந்து விட்டதால் அடுத்தபடியாக தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பதாக கூறப்பட்டபோதும், மெயின் வில்லனாக படத்தின் இந்தி வியாபாரத்தை கருதி அக்சய்குமாரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறாராம் முருகதாஸ்.