டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ்சினிமாவில் இயக்குநர்களுக்கு பஞ்சமே இல்லை. காளிதாஸ் பட இயக்குநர் ஹெ.எச்.எம். ரெட்டி தொடங்கி கணக்கு எடுக்கத் தொடங்கினால் தமிழ்சினிமாவை இயக்கியவர்கள் எண்ணிக்கையில் பல ஆயிரம் பேர் இருப்பார்கள். படத்தை இயக்கியவர்கள் எல்லாம் இயக்குநர்கள் என்றால், அனைவரும் இயக்குநர்கள்தான். ஆனால் தங்களின் தனித்துவமான சிந்தனையால் வித்தியாசமான... புதுமையான படங்களை இயக்கி, திரைப்படப் பார்வையாளர்களின் மனசை வென்றவர்கள் மட்டுமே காலத்தைக் கடந்தும் ஜீவிக்கிறார்கள்.
குறிப்பாக, தனக்கென புதிய பார்வையை... புதிய பாதையை தானே உருவாக்கிக் கொண்டு பயணித்த முன்மாதிரி இயக்குநர்கள் - டிரெண்ட் செட்டர்கள் - மட்டுமே மக்கள் மனதில் நட்சத்திர அந்தஸ்த்து பெற்ற இயக்குநர்களாக இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நட்சத்திர இயக்குநர்களில் ஒருவர்... மணிரத்னம். அவருக்கு இன்று பிறந்தநாள்.
1955 ஆம் ஆண்டு இதேநாளில் (ஜூன் 2 )பிறந்த மணிரத்னம், இன்று 62 ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். வீனஸ் ஸ்டுடியோஸ் அதிபர் வீனஸ் கோவிந்தராஜின் சகோதரர், வீனஸ் ரத்னத்தின் இளைய மகனான சுப்பிரமணியம் தான் இன்றைய மணிரத்னம். ஜம்னாலால் பஜாஜ் மேலாண்மை பள்ளியில் , எம்.பி.ஏ. படித்த மணிரத்னம், சினிமாவுக்கு வருவதற்கு முன் டி.வி.எஸ். நிறுவனத்தில் பணிபுரிந்தவர். வேலை பார்த்துக் கொண்டே இன்னொரு பக்கம், சினிமாவை இயக்கும் முயற்சியையும் தொடர்ந்து கொண்டிருந்தார்.
முதல்படம் : யாரிடமும் உதவியாளராக பணிபுரிந்திராத மணிரத்னத்தை நம்பி படம் தயாரிக்க யாரும் முன்வரவில்லை. அவரது பெரியப்பாவான வீனஸ் கோவிந்தராஜ், மணிரத்னத்தை வைத்து படம் தயாரிக்க முன் வந்தார். பல்லவி அனுபல்லவி என்ற பெயரில் 1983ல் கன்னடத்தில் தயாரிக்கப்பட்ட அந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். அன்றைய காலகட்டத்தில் முன்னணி இயக்குநராக இருந்த பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்தார். ஹிந்தி நடிகர் அனில்கபூர்தான் கதாநாயகன். விமர்சகர்களால் விரும்பப்பட்ட அளவுக்கு ரசிகர்களால் விரும்பப்படவில்லை. எனவே பல்லவி அனுபல்லவி தோல்விப்படமாக அமைந்தது. ஆனாலும் அந்த ஆண்டின் கர்நாடக மாநில விருதுப்பட்டியலில் சிறந்த திரைக்கதைக்கான விருதை வென்றது பல்லவி அனுபல்லவி.
முதல் தமிழ்ப்படம் : பிறகு உணரு என்ற மலையாளப்படத்தை இயக்கினார் மணிரத்னம். மோகன்லால் நடித்த இப்படம் கேரளத்தில் உள்ள தொழிலாளர் சங்கங்களில் நிலவும் ஊழலை வெளிச்சம் போட்டுக் காட்டியது. உணரு படமும் வர்த்தக வெற்றியைப் பெறவில்லை. எனவே வணிக ரீதியில் படம் இயக்கினால் மட்டுமே தன்னை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற புதிய கொள்கை முடிவுக்கு வந்த மணிரத்னம், முரளி சத்யராஜ், ரேவதியை வைத்து பகல்நிலவு என்ற படத்தை இயக்கினார்.
தன்னை சமரசம் செய்து கொண்டு வணிக சினிமாவை அவர் இயக்கினாலும் மணிரத்னம் தன்னை தரம் தாழ்த்திக்கொள்ளவில்லை. வணிக சினிமாவிலும் தன் முத்திரையை பதிக்கத்தவறவில்லை. அதுதான் மற்றவர்களிடமிருந்து அவரை வித்தியாசமாக தனித்துக்காட்டியது. இவருடைய படங்கள் சுருக்கமான வசனங்களுக்கும், நேர்த்தியான தொழில்நுட்பத்திற்கும் பெயர் பெற்றவை. இவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்தும் இளையராஜா மற்றும் ஏ. ஆர். ரஹ்மான் இருவரின் இசையமைப்பில் வெளியாகியுள்ளன.
இளையராஜா போய் ரஹ்மான் என்ட்ரி : இவரது முதல் திரைப்படமான பல்லவி அனுபல்லவி முதல் தளபதி வரை இளையராஜாதான் இசை. அமைதியான சுபாவம் கொண்ட மணிரத்னம் சுயமரியாதைக்காரர். படங்களில் சமரசம் செய்து கொள்ளாதது போலவே நிஜ வாழ்க்கையிலும் தன் தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டார். தன் அபிமானத்துக்குரிய இசையமைப்பாளராக இருந்த இளையராஜா, ஒரு சந்தர்ப்பத்தில் மணிரத்னத்தை மரியாதைக்குறைவாக நடத்தியதை பொறுக்க முடியாமல், இனி இளையராஜா உடன் இணைந்து பணியாற்றுவதில்லை என்ற முடிவை எடுத்தார்.
அந்த கோபத்தில்தான் ரோஜா படத்தில் ஏ. ஆர். ரஹ்மானை அறிமுகம் செய்தார். அவர் அறிமுகப்படுத்திய ஏ. ஆர். ரஹ்மான், ரோஜாவின் வெற்றிக்குப் பிறகு இளையராஜாவை வீட்டில் உட்கார வைத்தது மணிரத்னமே எதிர்பார்க்காத சர்ப்ரைஸ். ரோஜா படம் முதல் இன்று வரை மணிரத்னம் இயக்கும் படங்களுக்கு ஏ. ஆர். ரஹ்மான்தான் இசையமைப்பாளர்.
பயங்கரவாதம் பற்றி பேசிய மணி படங்கள் :
பகல் நிலவு, இதயகோவில், மௌனராகம், நாயகன், அக்னிநட்சத்திரம், அஞ்சலி, திருடா திருடா படங்களில் காதல், நகர் வாழ் நடுத்தர மக்களை பின்னணியாக கொண்ட பொழுதுபோக்கு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கிய மணிரத்னம், ரோஜா படத்தில் தீவிரவாதம் பற்றி பேசினார். அப்படத்துக்கு தேசிய அளவில் கிடைத்த கவன ஈர்ப்பு, அவரை தேசிய பிரச்சனைகள் பக்கம் சாய வைத்தது. ஏறக்குறைய அதில் ருசி கண்டார்.
தோல்வியும், வெற்றியும் : அதன் பிறகு அவர் இயக்கும் படங்கள் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிப்படங்களாக உருவாக்கப்பட்டன. அதனால் தில்சே (உயிரே), குரு (குரு), ராவண் (ராவணன்) ஆகிய படங்கள் தமிழ்ப்படங்களாகவும் இல்லாமல் ஹிந்திப்படங்களாகவும் இல்லாமல் இரண்டுங்கெட்டான் படங்களாகி தோல்வியை சந்தித்தன. அதன் பிறகு தன்னை சுய பரிசோதனை செய்து கொண்ட மணிரத்னம், தன் பாதையை மாற்றிக் கொண்டு ஓ காதல் கண்மணி படத்தை இயக்கினார். அவரே எதிர்பார்க்காத மிகப்பெரிய வெற்றி கிடைத்தது.
மணிரத்னத்தின் வருகைக்குப் பிறகு வந்த இயக்குநர்கள் அனைவருக்கும் மணிரத்னம் ஆதர்ஷமாக இருக்கிறார். கடந்த 30 வருடங்களில்... அதாவது மணிரத்னத்தின் வருகைக்குப் பிறகு வெளியான படங்களைப் பார்த்தால், குறைந்தபட்சம் ஒரு காட்சியாவது... அல்லது ஒரு வசனமாவது.... ஒரு ஷாட்டாவது மணிரத்னத்தின் சாயலில் இருப்பதை காண முடியும். மணிரத்னத்தின் திரையுலக வாழ்க்கையில் எத்தனை தோல்விப்படங்களைக் கொடுத்தாலும், இன்றைய இளம் இயக்குநர்களின் ஆதர்ஷமாக மணிரத்னமே இருக்கிறார். இதுதான் மணிரத்னத்தின் வெற்றி.
மணிரத்னம் பற்றி காதில் விழுந்த தகவல்கள்.....
மணிரத்னத்தின் திரைப்பட பட்டியல்....
1983 - பல்லவி அனுபல்லவி (கன்னடம்) - சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான கர்நாடக அரசின் திரைப்பட விருது
1984 - உணரு (மலையாளம்)
1985 - இதய கோவில்
1985 - பகல் நிலவு
1986 - மௌன ராகம் (பாக்யராஜின் "அந்த ஏழு நாட்கள்" திரைப்படத்தின் தழுவல் என்று விமர்சனங்களுக்கு உள்ளானது) சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது
1987 - நாயகன்
1988 - அக்னி நட்சத்திரம்
1989 - கீதாஞ்சலி (தெலுங்கு)
1990 - அஞ்சலி
1991 - தளபதி (மகாபாரதத்தின் கர்ணன், துரியோதனன் கதாபாத்திரங்களின் தழுவலாக கருதப்பட்டது)
1992 - ரோஜா (இந்திய முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று முஸ்லிம்களின் கண்டனங்களுக்கு உள்ளானது)
1993 - திருடா திருடா
1995 - பம்பாய்
1997 - இருவர்
1998 - தில் சே (இந்தி) - தமிழில் உயிரே என்ற பெயரில் மொழி மாற்றப்பட்டு வெளிவந்தது.
2000 - அலைபாயுதே
2002 - கன்னத்தில் முத்தமிட்டால்
2004 - ஆய்த எழுத்து - யுவாவும் ஆய்த எழுத்தும் வெவ்வேறு நடிகர்களை வைத்து ஒரே நேரத்தில் தமிழிலும் இந்தியிலும் திரைப்படமாக்கப்பட்டன
2007 - குரு (இந்தி) - இதே பெயரில் தமிழிலும் மொழிமாற்றப்பட்டு வெளியானது.
2010 - ராவணன்(இந்தி)- திரைக்கதை இராமாயணத்தின் இராவணன் கதாபாத்திரத்தின் தழுவல். ராவண் என்ற பெயரில் இந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியானது
2013- கடல்
2015- ஓ காதல் கண்மணி