இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
சென்னை அடையாறு திரு.வி.க மேம்பாலத்தில் பைக்கை வேகமாக ஓட்டியதுடன், வயதான பெண்ணிடம் மிரட்டும் தொணியில் நடந்து கொண்ட வாலிபர்களை அந்த வழியாக வந்த நடிகர் சூர்யா தட்டிக் கேட்டுள்ளார். இது தொடர்பாக சூர்யாவுக்கும், வாலிபர்களுக்கும் நடந்த விவாதத்தில் வாலிபர்கள் சூர்யா பற்றி தவறாக பேசவும் ஆத்திரம் அடைந்த சூர்யா வாலிபரின் கன்னத்தில் அறைந்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சென்னை பாரிமுனையை சேர்ந்த பிரேம்குமார் தன்னை சூர்யா அடித்து விட்டதாகவும் மன உளைச்சலால் நான் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு சூர்யா தான் பொறுப்பு என்றும் சாஸ்திரி நகர் போலீசில் புகார் அளித்தார். வயதான பெண்ணிடம் தகராறு செய்த இளைஞர்களிடமிருந்து அந்த பெண்ணை மீட்டு போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டு சூர்யா கிளம்பி விட்டார். அவர் யாரையும் தாக்கவில்லை என்று சூர்யா தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று போலீசில் புகார் அளித்த பிரேம்குமார் அதனை வாபஸ் பெற்றுக் கொண்டார். 22 வயதாகும் பிரேம்குமார் ஒரு கால்பந்து வீரர். சுங்கத்துறை அணிக்காக விளையாடி வருகிறார். சூர்யாவின் தந்தை சிவகுமார், தனது வழக்கறிஞருடன் பிரேம்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சமரசம் ஏற்பட்டு புகார் வாபஸ் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
சூர்யா நன்றி : இதனிடையே சூர்யாவின் இந்த செயலை பாராட்டி பாதிக்கப்பட்ட அந்த பெண்ணான புஷ்பா, தன் டுவிட்டர் பக்கத்தில் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சூர்யாவும் அதை ரீ-டுவிட் செய்ததோடு, அந்த பெண்மணிக்கு நன்றியும் கூறியுள்ளார்.