ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல திரைப்பட நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர். திருடா திருடி படத்தில் இடம்பெற்ற மன்மதராசா பாடல் மூலம் புகழ்பெற்றார். இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளார். இவரது மூத்த மகன் விஜய் கிருஷ்ணாவுக்கும், பெங்களூரைச் சேர்ந்த ஜோதி என்பவருக்கும் 2013ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
மருமகள் ஜோதி, மாமனார் சிவசங்கர் மற்றும் மாமியார் சுகன்யா, கணவர் விஜய் கிருஷ்ணா ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார்கள் என்று போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிவசங்கர் மாஸ்டரை தேடி வந்தனர். அவர் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் சிவசங்கர் மாஸ்டர் நேற்று தனது மனைவி, மகனுடன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: திருமணம் ஆன சில நாட்களிலேயே மகனும், மருமகளும் அடிக்கடி சண்டை போட்டனர். தனிக்குடித்தனம் வைத்து பார்த்தேன் அப்போதும் இருவருக்கும் ஒத்துப்போகவில்லை. என் மகன், மருமகளை விவாகரத்து செய்து விட்டதாக கூறி எங்களிடமே வந்து விட்டான். இருவரையும் சேர்த்து வைக்க முயற்சித்தேன். ஆனால் மருமகள் என் மகனோடு வாழவே முடியாது என்று உறுதியாக கூறிவிட்டார். எங்கள் மீது போலீசில் பொய் புகார் கொடுத்தார். கைதுக்கு பயந்து தலைமறைவாக இருந்தோம்.
ஜோதி சொல்வது அனைத்தும் பொய். நாங்கள் அவரை துன்புறுத்தவில்லை. என்னிடம் 10 கோடி ரூபாயும், எனது வீட்டையும் கேட்டு ஜோதி குடும்பத்தினர் மிரட்டுகிறார்கள். முதல்வர் இந்த பிரச்சினையில் தலையிட்டு என்னை காப்பாற்ற வேண்டும். என் மகன் இப்போதும் ஜோதியுடன் இணைந்து வாழத் தயாராக இருக்கிறான் என்றார்.