புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
ஒரே படத்தில் பாடலுக்கு ஒரு இசையமைப்பாளர், பின்னணி இசைக்கு இன்னொரு இசையமைப் பாளர் என இரண்டு பேர் இடம்பெறுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். அதேபோல், விஸ்வநாதன் - ராமமூர்த்தி, சங்கர்- கணேஷ் என இரண்டு இசையமைப்பாளர்கள் இணைந்து நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்து வந்த வரலாறும் தமிழ் சினிமாவில் நிகழ்ந்திருக்கிறது. இந்த நிலையில், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா-தமன்னா இணைந்து நடித்துள்ள படத்தில் மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைக்கிறார்களாம்.
இதுபற்றி ஏ.எல்.விஜய் கூறுகையில், பிரபுதேவாவை வைத்து நான் இயக்கி வரும் அபினேட்ரி படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது. அந்தவகையில், மூன்று மொழிக்கும் சேர்த்து ஒரே இசையமைப்பாளர் இசையமைப்பதைவிட அந்தந்த மொழிகளில் பிரபலமாக இருக்கும் இசையமைப்பாளர்கள் இசையமைத்தால், படத்திற்கு ஒரு பலமாக இருக்குமே என்று நினைத்தோம். அதன்காரணமாக, தமிழ் பதிப்புக்கு ஜி.வி.பிரகாஷ், தெலுங்கிற்கு தமன், இந்திக்கு சஜித்வஜித் ஆகிய பிரபல இசையமைப்பாளர்களை இசையமைக்க வைத்திருக்கிறோம். இதுகூட இந்த படத்தில் ஒரு புதுமையான விசயம்தான் என்கிறார் அவர்.