ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்ஷ்ய் குமார், தற்போது ஷங்கரின் இயக்கத்தில், ரஜினியுடன் '2O' படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அக்ஷ்ய் குமார் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் என்ற பெருமையோடு '2O' உருவாகி வருகிறது. இதனிடையே '2O' படத்தில் தான் எதற்காக நடிக்கிறேன் என்று அக்ஷ்ய் குமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது... '2O' படத்தில் நான் நடிக்க முக்கிய காரணமே ரஜினியின் கையால் அடிவாங்க வேண்டும் என்பதற்காகத்தான். இதை என் வாழ்க்கையின் மைல்கல்லாக பார்க்கிறேன். மேலும் இப்படத்தில் நான் சூப்பர் ஹீரோகவும் நடிக்கிறேன், அதுவும் சூப்பர் ஹீரோ வில்லனாக நடிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
'2O' படம் 2017ம் ஆண்டு மத்தியில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.