ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சூப்பர் ஸ்டார் ரஜினி, ராதிகா ஆப்தே, ரஞ்சித், கலையரசன், தன்ஷிகா நடித்துள்ள கபாலி படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. பா.ரஞ்சித் இயக்குகிறார். படத்தில் கபாலிக்கு சென்னை வில்லனாக கிஷோர் நடித்துள்ளார். மலேசியா வில்லனாக நடித்திருப்பவர் பிரபல ஹாலிவுட் நடிகர் வின்ஸ்டன் சாவோ. இவர் சீன படத்தில் அறிமுகமாகி தைவான், சிங்கப்பூர், மலேசிய படங்களில் நடிப்பதுடன் ஜாக்கிசான் நடிக்கும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். ஜாக்கிசானுடன் இவர் நடித்துள்ள 'ஸ்கிப்ட்ரேஸ்' ஜூலையில் வெளிவருகிறது.
கபாலியில் ரஜினியுடன் நடித்துள்ள வின்ஸ்டன் சாவோ மலேசிய மீடியாக்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: எனக்கு மலேசியாவில் வசிக்கும் பல தமிழர்கள் ரசிகர்களாக உள்ளனர். அந்த வகையில் எனக்கும் தமிழ்நாட்டுக்கும் தொடர்பு உண்டு. 'முத்து', 'எந்திரன்' உள்ளிட்ட சில ரஜினி படங்களை நானும் பார்த்திருக்கிறேன். திடீரென்று அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தபோது ஆச்சர்யமாக இருந்தது. நான் கடந்த 25 வருடங்களாக நடித்து வருகிறேன். நிறைய இயக்குனர்களிடம் வேலை பார்த்திருக்கிறேன். ஆனாலும் ரஞ்சித்துடன் பணியாற்றிய அனுபவம் வித்தியாசமானதாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. நாங்கள் சினிமாவை ஒரு தொழிலாக பார்க்கிறோம். ஆனால் அவர் அதற்கும் மேலாக அதனை நேசிக்கிறார்.
ரஜினியுடன் நடித்து முடித்த பிறகுதான் அவருக்கு 60 வயதுக்கு மேலாகிவிட்டது என்றார்கள். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. 60 வயதுக்கு மேல் ஒருவர் இத்தனை எனர்ஜியுடன் இருக்க முடியுமா என்பதே அந்த ஆச்சர்யம். அவருக்கு கோடிக் கணக்கில் ரசிகர்கள் இருப்பதாக சொன்னார்கள். 10 நாள் உடன் நடித்த நானே அவரது ஸ்டைலுக்கு ரசிகனாகிவிட்டேன். அவரது படத்தை தொடர்ந்து பார்க்கிறவர்கள் ரசிகர்களாவிடுவதில் ஆச்சர்யம் இல்லை. என்று கூறியிருக்கிறார்.