ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிலிம்பேர் பத்திரிக்கை ஆண்டு தோறும் தென்னிந்திய மற்றும் வட இந்திய சினிமா கலைஞர்களுக்கு தனித்தனியாக ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவிக்கிறது. 2015ம் ஆண்டு வெளிவந்த படங்கள் மற்றும் திரைக் கலைஞர்களுக்கான 63வது விருது வழங்கும் விழா வருகிற ஜூன் 18ந் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது.
இண்டர்நேஷனல் கன்வென்சன் செண்டரில் நடக்கும் இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களுக்கு தனித்தனியாக விருது வழங்கப்படுகிறது. இதில் 4 மொழியைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். விழாவையொட்டி நடிகர், நடிகைகளின் பிரமாண்ட நடன நிகழ்ச்சிகளும் நடக்கிறது. விழாவை நடிகர் அரவிந்த்சாமி தொகுத்து வழங்குகிறார்.
இதனை பிலிம்பேர் ஆசிரியர் ஜித்தேஷ், மெயின் ஸ்பான்சரான பிரிட்டாணியா நிறுவன அதிகாரி வினய் சுப்பிரமணியம், நடிகர் அரவிந்த்சாமி ஆகியோர் சென்னையில் அறிவித்தனர்.
அரவிந்த்சாமி பேசும்போது... “1999 முதல் சினிமாவை விட்டு விலகி இருந்தேன். அந்த காலக்கட்டத்தில் சினிமா பார்ப்பது கூட கிடையாது. 2007ம் ஆண்டு பிலிம்பேர் விருதுக்கான நடுவராக இருந்தேன். அப்போது குறுகிய காலத்தில் நிறைய படங்கள் பார்த்தேன். அதுதான் என்னை மீண்டும் நடிக்கத் தூண்டியது. இப்போது நல்ல கதைகள் கேட்டு அவற்றுக்கு உதவ வேண்டும் என்பதற்காக நடிக்கிறேன் என்றார்.