ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாடலாசிரியர் கவி.காளிதாஸ் கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் பாதிகப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தஞ்சையில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உடல்நிலை தேறி கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 66. அவரது உடல் தஞ்சையிலிருந்து சென்னை கொண்டு வரப்பட்டு பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது மகன் பாலசுப்பிரமணியத்தின் வீட்டில் வைகப்பட்டுள்ளது. இன்று இறுதி சடங்குகள் நடக்கிறது. மாலை 6 மணிக்கு மூலக்கொத்தலம் இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.
காரைக்குடி அருகில் உள்ள திருப்பத்தூரைச் சேர்ந்த கவிஞர் காளிதாஸ் திருப்பத்தூரான் என்ற பெயரில் பக்தி பாடல்கள் எழுதி வந்தார் வைகாசி பொறந்தாச்சி படத்தில் இசை அமைப்பாளர் தேவா சினிமா பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார். பெயரையும் காளிதாஸ் என்று மாற்றினார். சுமார் 150 படங்களுக்கும், ஏராளமான பக்தி ஆல்பங்களுக்கும் பாடல்கள் எழுதி உள்ளார்.