விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
இமயம் மற்றும் கேப்டன் டி.வியில் தொகுப்பாளராக இருந்த பிரியங்கா இப்போது பிசியான சீரியல் நடிகை. நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் மூலம் நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு சரவணன் மீனாட்சி, பைரவி தொடர்களில் நடித்தார். இப்போது பிரியமானவளே, வம்சம் தொடர்களில் நடித்து வருகிறார்.
நடிகை ஆகிவிட்டாலும் அவ்வப்போது தொகுப்பாளினியாகவும் அவதாரம் எடுக்கிறார். நடிப்பு, தொகுப்பு இரண்டிலும் சாதனை படைக்க விரும்பினாலும் அவருக்கு இன்னொரு விருப்பம் இருக்கிறதாம். அது ஐ.ஏ.எஸ் தேர்வெழுதி கலெக்டர் ஆக வேண்டும் என்பது. இதற்காக இப்போது தீவிரமாக படித்துக் கொண்டிருக்கிறார். “என்னதான் நடிகை, தொகுப்பாளினி என்றாலும் இதன் மூலம் மக்களை எண்டர்டெயின்மெண்ட்தான் பண்ண முடியும். மக்களுக்கு சேவை செய்யணும்னா கலெக்டர் ஆகணும். அதற்காக தொடர்ந்து முயற்சி பண்ணுவேன்” என்கிறார் பிரியங்கா. இதையேதான் நடிகை ஆர்த்தி பத்து வருடமாக சொல்லி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.