ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அல்லு அர்ஜூன் நடித்த 'சரிதோடு' படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் பெரும் வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு படமும் வெற்றி பெறும்போது அல்லு அர்ஜூன் விஜயநகர மாவட்டம் சிம்மாசலத்தில் உள்ள வராக லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சென்ற வழிபடுவது வழக்கம். அந்த வகையில் சரிதோடு வெற்றியை தொடர்ந்து நேற்று கோவிலுக்குச் சென்றார்.
அது ஒரு மலைக்கோவில் மேலே செல்ல படிக்கட்டுகளும் உண்டு, லிப்ட் வசதியும் உண்டு. வழக்கமாக அல்லு படிக்கட்டு வழியாகத்தான் செல்வார். ஆனால் இந்த முறை அல்ல அர்ஜுன் வருவதை அறிந்து கொண்ட அவரது ரசிகர்கள் ஏராளமானோர் கோவில் முன் திரண்டு விட்டனர். இதனால் அல்லு அர்ஜூன் படிக்கட்டை தவிர்த்து லிப்டில் ஏறினார். அவருடன் ஏராளமான ரசிகர்களும் லிப்டில் ஏறியதால். லிப்ட் பாரம் தாங்காமல் பாதி வழியில் நின்று விட்டது. கதவும் திறக்காததால் அல்லு 10 நிமிடம் வரை லிப்டிற்குள் மாட்டிக் கொண்டார்.
அதன்பிறகு கோவில் ஊழியர்கள் வந்து கதவை உடைத்து அல்லு அர்ஜூனை மீட்டனர். பின்னர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்திய அல்லு அர்ஜூன் கோவில் நிர்வாக அதிகாரியை சந்தித்து “எனது ரசிகர்களால்தான் லிப்ட் பழுதானது. அதை சரி செய்யும் செலவை நானே தந்து விடுகிறேன்” என்று கூறிவிட்டுச் சென்றார்.