கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
பிரபுதேவா தமிழில் கடைசியாக நடித்த படம் களவாடிய பொழுதுகள். தங்கர்பச்சான் இயக்கிய இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரோஜாக்கூட்டம் பூமிகா நடித்திருந்தார். அந்த படம் இப்போதுவரை திரைக்கு வரவில்லை. தங்கர்பச்சான் அதற்காக எடுத்த முயற்சிகள் எல்லாமே தோல்வியில் முடிந்து விட்டன. அதன்பிறகு தமிழில் நாயகனாக நடிக்காத பிரபுதேவா, தற்போது ஏ.எல்.விஜய் இயக்கும் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இயக்கி வரும் அபினேத்ரி என்ற ஹாரர் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தமன்னா நாயகியாக நடித்திருக்கிறார்.
ஏற்கனவே பிரபுதேவா, தமன்னா இருவரும் பாலிவுட்டுக்கு பரிட்சயமானவர்கள் என்றபோதும், ஏ.எல்.விஜய், இந்த படம் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமாகிறார். மேலும், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் மாதம் 3-ந்தேதி வெளியாக இருப்பதாக அறிவித்துள்ள ஏ.எல்.விஜய், இப்படத்தில் தன்னுடன் இணைந்து ஹாலிவுட் கதாசிரியர் பவுன் ஆரான் என்பவர் துணை கதாசிரியராக பணியாற்றியிருப்பதாகவும், அது கதைக்கு பெரிய பலமாகவும், ஹாலிவுட் லுக்கையும் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்