பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
கதாநாயகிகளின் மார்க்கெட் சரிவடையும் நேரத்தில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்க விரும்புவார்கள். இந்த வரிசையில் தற்போது சேர்ந்திருக்கிறார் த்ரிஷா. தமிழ் சினிமாவில் கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகை த்ரிஷா. இவரது நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் 'நாயகி'. இது த்ரிஷாவின் 50 ஆவது படம்.
அரண்மனை 2, நாயகி படங்களைத் தொடர்ந்து 3 ஆவதுமுறையாக ஒரு பேய் படத்தில் நடிக்கிறார் த்ரிஷா. இந்தப் படத்துக்கு 'மோகினி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. சூர்யாவை வைத்து 'சிங்கம் 2' படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஆர்.மாதேஷ். ஒரு காலத்தில் இயக்குநர் ஷங்கருக்கு வலது கரமாக இருந்தவ மாதேஷ், பின்னர் அவரிடமிருந்து விலகி, விஜய்யை வைத்து மதுர, பிரசாந்த் நடித்த 'சாக்லேட்' உட்பட சில படங்களை இயக்கினார்.
அதன் பிறகு விநியோகஸ்தராக மாறிய ஆர்.மாதேஷ் பல வருட இடைவெளிக்குப் பிறகு மோகினி படத்தின் மூலம் மீண்டும் இயக்குநராகி இருக்கிறார். இப்படத்தின் படபிடிப்பு ஜூன் 2 ஆம் தேதி முதல் லண்டனில் ஆரம்பமாகிறது தொடர்ந்து 40 நடைபெறுகிறது. அதன் பிறகு இந்தியாவில் 20 நாட்களும், பாங்காகில் 10 நாட்களும், பின்னர் மெக்சிகோவிலும் நடைபெறும்.