ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஐஸ்வர்யா ராய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் சரப்ஜித். பாகிஸ்தான் சிறையில் நீண்டகாலம் சித்தரவதைப்பட்டு அங்கு நடந்த கலவரத்தில் கொல்லப்பட்ட இந்தியரான சரப்ஜித்சிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் வெளிவந்தது. இதில் சரப்ஜித்தாக ரன்தீப்பும், அவரின் சகோதரியான தல்பீர் ரோலில் ஐஸ்வர்யாவும் நடித்திருந்தனர். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வசூலை குவிக்கவில்லை.
இதுப்பற்றி ஐஸ்வர்யா ராய் கூறியிருப்பதாவது... ''ஒரு படத்தின் வசூலை மையமாக வைத்து நான் படம் பண்ணுவது கிடையாது. பாக்ஸ் ஆபிஸில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. சரப்ஜித் படம் வெளிவந்த பிறகு பலரும் என்னை பாராட்டினார்கள். அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்த பாராட்டை என்னை இன்னும் வலிமைப்படுத்துகிறது. இது மிகவும் சென்சிட்டிவான படம், ரசிகர்களின் ஆதரவு இந்தப்படத்திற்கு வலு சேர்க்கும் என்று கூறியுள்ளார்.