சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி |
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'ஆண்டாள் அழகர்' தொடர் தற்போது 'பகல் நிலவு' என்ற பெயரில் அதன் இரண்டாம் பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இளம் தலைமுறை காதலர்களாக நடிப்பவர்கள் அன்வரும், சமீராவும். சீரியலில் சீரியசாக காதலிக்கும் இவர்கள் இருவரும் நிஜத்திலும் காதலர்களாகி விட்டார்கள்.
தெலுங்கு சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த சமீரா 'பகல் நிலவு' மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார், அன்வர் தமிழில் ஏராளமான சீரியலில் நடித்தவர். “நான் நடிகர் என்றாலும் சமீராவின் நடிப்புக்கு நான் ரசிகன். ஒரு ஷாப்பிங் மாலில்தான் முதல் முதலில் சந்தித்தோம். பிறகு நண்பர்களானோம் பின்பு அதுவே காதலானது என்கிறார் அன்வர். நிஜ காதலர்களே சீரியல் காதலர்களாக இருப்பதால் காதல் காட்சிகளில் தனி கவனம் செலுத்துகிறது சீரியல் கதை இலாக்கா.