பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பிறகு சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் ராதாரவி. அந்த வகையில், அரண்மனை-2, இறுதிச்சுற்று, நாரதன், ஆறாது சினம், மாப்ள சிங்கம், மனிதன், மருது ஆகிய படங்களில் நடித்தவர் தற்போது இறைவி, எங்கிட்ட மோதாதே உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.மேலும், தான் நடிக்கும் படங்கள் சம்பந்தப்பட்ட ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு வரும் ராதாரவி தனக்கு சின்ன வேடம் கொடுத்தாலும் அந்த இயக்குனர் களுக்கு பெரிய நன்றியும் தெரிவித்துக்கொள்கிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இறைவி படத்தின் பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட ராதாரவி, தனது பெயரையும் மற்ற நடிகர்களுக்கு இணையாக இடம்பெறச்செய்ததற்காக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். அதேசமயம், அவ்விழாவினை தொகுத்து வழங்கிய பெண், அப்படத்தில் நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா, விஜய சேதுபதி, பாபி சிம்ஹா ஆகியோரின் பெயரையே அடிக்கடி குறிப்பிட்டவர், ராதாரவியின் பெயரை குறிப்பிடவில்லை. இதனால் செம கோபமாகி விட்டார் அவர்.
அதனால் தான் பேச மைக்கைப் பிடித்தபோது அந்த தொகுப்பாளினியிடம், இத்தனை பேர் பெயரை சொல்லிவிட்டு என் பெயரை மட்டும், மற்றும் பலர் லிஸ்டில் சேர்த்து விட்டாயே ஏன்? என்று தனது கோபத்தை வெளிப்படுத்தினார். அதோடு, நான் இதுவரை 300 படங்களில் நடித்திருக்கிறேன். அப்படிப்பட்ட என்னை யார் என்று உனக்கு தெரியவில்லையே? என்று கேட்டவர், ஒருவிழாவுக்கு செல்கிறோம் என்றால் அதில் யார் யார் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் என்னென்ன படங்களில் நடித்திருக்கிறார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு வர வேண்டும் என்றும் அந்த தொகுப்பாளினிக்கு அட்வைஸ் கொடுத்தார் ராதாரவி.