டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வல்லவன் படத்தில் முதன்முதலாக சிம்பு-நயன்தாரா இருவரும் இணைந்தனர். அப்போது அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டது. ஆனால் சில மாதங்களிலேயே அவர்கள் பிரிந்து விட்டனர். அதனால் அதையடுத்து அவர்களை இணைத்து படமெடுக்க நடந்த முயற்சிகள் எல்லாமே தோற்று விட்டன. ஆனால் பல வருடங்களுக்குப்பிறகு டைரக்டர் பாண்டிராஜ் எடுத்த முயற்சி வெற்றிபெற்றது. இது நம்ம ஆளு படத்தில் அவர்களை காதலர்களாகவே நடிக்க வைத்து விட்டார். அந்த படம் நேற்று வெளியாகியுள்ளது.
மேலும், தனது படங்களின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் கலந்து கொள்ளாத நயன்தாரா, இது நம்ம ஆளு படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. ஆனால் டைரக்டர் பாண்டிராஜ் சில சேனல்களில் தோன்றி படம் குறித்து பேசி வருகிறார். அப்படி அவர் ஒருசேனலில் பேசும்போது, எப்போதுமே நயன்தாரா படப்பிடிப்புத்தளத்துக்கு சரியான நேரத்திற்கு வந்து விடுவார். ஆனால் சிம்பு சில நாட்கள் தாமதமாக வருவார். அவருக்கு முன்பே வந்து மேக்கப்போட்டு விட்டு காத்துக்கொண்டிருக்கும் நயன்தாரா, லேட்டாக சிம்பு வரும்போது அவருடன் சண்டை போடுவார். அவரை உரிமையோடு திட்டுவார். ஆனால் அப்படி அவர்கள் திட்டிக்கொண்டதுகூட படத்தின் கதைக்கு தேவைப்பட்டது என்பதால், பின்னர் கேமரா முன்பும் அதே மாதிரி அவர்கள் நடித்தது படத்திற்கும் பெரிய பலமாக இருந்தது என்கிறார் பாண்டிராஜ்.