ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது | கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' |
சமீபகாலமாக கமர்ஷியல் படங்களை காட்டிலும் யதார்த்த படங்கள் தான் அனைத்து மொழிகளிலும் வெற்றி பெறுகின்றன. இது நல்ல விஷயம் என்கிறார் அக்ஷ்ய் குமார். அக்ஷ்ய் குமார் நடிப்பில் தற்போது 'ஹவுஸ்புல்-3' படம் வெளிவர இருக்கிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கிறார் அக்ஷ்ய்.
அப்போது நிகழ்ச்சி ஒன்றில் அக்ஷ்ய் பேசியதாவது... ''யதார்த்தமான படங்களை ரசிகர்கள் வரவேற்பது மகிழ்ச்சி, இது ஒரு அருமையான விஷயம். நான் 'ஸ்பெஷல் 26' படத்தில் நடித்தேன். இது ரூ.70 முதல் 80 கோடி வரை வசூலித்தது. அதேப்போன்று 'பேபி' படம் ரூ.90 கோடி வசூலித்தது, ஏர்லிப்ட் படம் ரூ.125 கோடி வசூலித்தது. நீர்ஜா படமும் சூப்பர் ஹிட்டானது, நல்ல வசூல் செய்திருக்கிறது என்று சொன்னார்கள், ஆனால் எவ்வளவு என்று தெரியவில்லை. இந்தப்படங்கள் எல்லாமே யதார்த்த படங்கள் தான். இதை ரசிகர்கள் எல்லாம் மிகவும் விரும்பி பார்த்ததால் தான் ஹிட்டாக அமைந்தன என்று கூறியுள்ளார்.