டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா நடித்துள்ள 'இது நம்ம ஆளு' படத்தை பாண்டிராஜ் இயக்கி உள்ளார். சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி.ராஜேந்தர் தயாரித்துள்ளார். இந்த படம் தயாராகி 2 வருடங்களுக்கு பிறகு கடும்போராட்டத்துக்கு பிறகு இன்று வெளியாகி உள்ளது. அப்படி இருந்தும் கடைசி நேரத்தில் 4 மாவட்டங்களில் வெளியிட நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
புரசைவாக்கத்தை சேர்ந்த சஞ்சய்குமார் என்ற பைனான்சியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் 'இது நம்ம ஆளு' படத்தை தயாரிக்க என்னிடம் ஒரு கோடியே 9 லட்சத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாங்கியது. படத்தை வெளியிடும் முன் கடனை வட்டியுடன் திருப்பி தருவதாகவும் வட ஆற்காடு, தென் ஆற்காடு ஏரியாவில் படத்தை திரையிட உரிமம் தரப்படும் என்றும் ஒப்பந்தம் செய்தனர். ஆனால் என் கடனை திருப்பி தராமலும் எனக்கு உரிமம் தராமலும் படத்தை வெளியிடுகிறார்கள் எனவே படத்தை தென் ஆற்காடு, வட ஆற்காடு ஏரியரிவல் திரையிட தடைவிதிக்க வேண்டும். என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த நீமிமன்றம். மனுதாரருக்கு பணத்தை திரும்பி தரும்வரை படத்தை திரையிட தடைவிதித்தது. இதனால் இன்று வட ஆற்காடு, தென் ஆற்காடு ஏரியாவுக்கு உட்பட்ட கடலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் படம் வெளியாகவில்லை.