‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! |
ஹாரர் பட வரிசையில் மே-27 அன்று ரிலீசாகவிருக்கிற படம் 'மீரா ஜாக்கிரதை'. “ஒரு பரபரப்பான நெடுஞ்சாலையில் நள்ளிரவில் அமானுஷ்ய சக்தி நடமாடுகிறது. அதைப்பற்றி ஆராய்ச்சி செய்து படமெடுக்க இளைஞர் குழு ஒன்று புறப்படுகிறது. அவர்களுக்கு நேரும் அனுபவங்களை பரபரப்பாக சொல்லும் படம் தான் 'மீரா ஜாக்கிரதை'' என்கிறார் இப்படத்தை இயக்கியிருக்கும் ஆர்.ஜி.கேசவன். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர்! சினிமா ஆர்வத்தால் யாரிடமும் பணி புரியாமலேயே இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தில் நான் நடிக்கவே இல்லை... வேறு படத்தில் நான் நடித்த போட்டோவை வைத்து விளம்பரம் செய்கின்றனர் என்று நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார் பாபிசிம்ஹா. அவர் கொடுத்த புகாரின் பேரில் சில தினங்களுக்கு முன் மீரா ஜாக்கிரதை படத்தைப் பார்த்தார் நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர். படத்தைப் பார்த்த நாசர், மீரா ஜாக்கிரதை படத்தில் பாபிசிம்ஹா நடித்துள்ளது உண்மைதான். அவர் பொய்ப்புகார் கொடுத்திருக்கிறார் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
தான் நடித்த படத்தை ஏன் பாபிசிம்ஹா நடிக்கவில்லை என்று பொய் சொல்ல வேண்டும்? ஒரு பெண்ணை பலவந்தப்படுத்தி பாபி சிம்ஹா கொன்று விடுகிறார். அந்தப்பெண்ணின் ஆவி அவரை பழிவாங்குவதான் மீரா ஜாக்கிரதை படத்தின் கதை. தற்போது ஹீரோவாகிவிட்டநிலையில் இந்தப் படம் ரிலீஸ் ஆனால் தன்னுடைய இமேஜ் என்னாவது என்ற கடுப்பில்தான் மீரா ஜழக்கிரதை படத்துக்கு கட்டையைப் போட்டிருக்கிறார் பாபி சிம்ஹா.