இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சமீபத்தில் பிரான்ஸில் நடந்து முடிந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் தொடர்ந்து 15வது ஆண்டாக நடிகை ஐஸ்வர்யா ராயும் பங்கேற்றார். ஐஸ்வர்யாவின் அழகு முன்பு போல் இல்லை சிலர் கிண்டல் செய்தனர். மேலும் லாரியல் அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில், ஐஸ்வர்யா ராய் பங்கேற்றார். இந்த விழாவில் ஐஸ்வர்யா ராய் அதிக மேக் - அப் இல்லாமல், வயலட் கலர் லிப்ஸ்டிக்குடன், சாதாரணமாக தான் தோற்றமளித்தார். மேலும் அவர் அணிந்திருந்த ஆடையை 5 தையல்காரர்கள் 300 மணிநேரம் செலவிட்டு தயாரித்ததாக கூட செய்தி வந்தது. அதேசமயம் அவரின் ஆடை வடிவமைப்பு, லிப்ஸ்ட்டிக் பற்றியும் விமர்சனங்களும் வந்தன.
இந்நிலையில் அதே கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற சோனம் கபூரிடம் ஐஸ்வர்யாவின் உடை மற்றும் லிப்ஸ்ட்டிக் பற்றி கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது... ''அன்றைய தினம் ஐஸ்வர்யா ராய் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார், ஏனென்றால் அன்றைக்கு அனைவரின் பார்வையையும் அவர் தன் பக்கம் ஈர்த்திருந்தார் என்றார். மேலும் அவரிடத்தில், ஐஸ்வர்யா ராய் லாரியல் அழகு சாதன பொருட்கள் சார்பில் கலந்து கொண்டது பற்றி கேட்டபோது, லாரியல் சார்பாக அவர் பங்கேற்றது போன்று தெரியவில்லை, அங்கு அமுல் கம்பெனியும் இருந்ததாக எல்லோரும் பேசினார்கள் என்று சோனம் கபூர் கூறினார்.